சென்னை:
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நவம்பர் 2ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த 7 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிக்கு திரும்புமாறு அரசு வலியுறுத்தியும் 1550 பேர் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளனர்.
போராட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், முதல்வர் தலைமையில் நவம்பர் 2ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது.
இந்தக்கூட்டத்தில் டாக்டர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.