சென்னை:
தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவரும் பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி கூடியது. ஜனவரி 4ம் தேதி முதல் 8ம் தேதி வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதிப்பதற்காக இம்மாதம் 28ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது.