திருவண்ணாமலையில் 1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!

திருவண்ணாமலையில் 1.5 டன் பிளாஸ்டிக் பறிமுதல்!

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மார்க்கெட் பகுதியில், நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 1.5 டன் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல் செய்தனர்.

மார்க்கெட் பகுதியான சிவன் பட தெரு, மார்க்கெட் ரோட, காமாட்சியம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள கடையில் அதிக அளவில் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. அதிகபட்சமாக அந்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அந்த பகுதியில் மொத்தம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 1.5 டன்னும், 19 ஆயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்