கணவன் கண் முன்பே மனைவி பரிதாப பலி..!

கணவன் கண் முன்பே மனைவி பரிதாப பலி..!

திருப்பத்தூர்:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் லாரி மோதி கணவன் கண் எதிரே மனைவி பரிதாப உயிரிழந்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி மேரி என்கின்ற மலர்கொடி.

இவர்கள் இருவரும் 2 நாட்களுக்கு முன்பாக திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர். மதிய உணவு சாப்பிடுவதற்காக பைக்கில் இரண்டு பேரும் பைக்கில் வந்துள்ளனர்.

அப்போது, லாரி ஒன்றை கடக்க முயற்சித்தபோது, நிலைதடுமாறி லாரியில் இடித்ததால், பைக்கின் பின்புறம் அமர்ந்து சென்ற மனைவி மேரி என்கின்ற மலர்க்கொடி லாரியின் பின் சக்கரத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

கணவன் கண் முன்பே மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்