திருப்பதி:
சூரிய கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைக்கப்பட்ட நிலையில், தற்போது நடை திறக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணம் இன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நிகழ்ந்தது. இந்த சூரிய கிரகணம் நிறைவடைந்ததையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறக்கப்பட்டது.
சுத்தம் செய்யும் பணிகள் நடைபெறுவதால் பிற்பகல் 2 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.