திருப்பதியில் நாளை தரிசனம் ரத்து

திருப்பதியில் நாளை தரிசனம் ரத்து

திருப்பதி:

திருமலை ஏழுமலையான் கோவிலில் நாளை 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருமலையில் வரும் செப்டம்பர் 30ம் தேதி முதல் பிரம்மோற்சவ விழா நடைபெறவுள்ளது. இதனையொட்டி, வரம் செப்டம்பர் 24ம் தேதி கோவில் சுத்தம் செய்யப்படுவதால், அன்று காலை 6 மணி முதல் 11 மணி வரை 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

கோவிலை சுத்தப்படுத்தும் பணி நிறைவடைந்தவுடன், வழக்கமான பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்