திருச்செந்தூரில் பூஜை நேரம் மாற்றம்!

திருச்செந்தூரில் பூஜை நேரம் மாற்றம்!

திருச்செந்தூர்:

சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பூனைகள் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இன்று நள்ளிரவு 1.37 மணி முதல் நாளை அதிகாலை 4.29 மணி வரை சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. இதனால், திருச்செந்தூர் கோவிலில் இரவு 9.30 மணிக்கு பள்ளியறை திறக்கப்பட்டு, சுவாமிக்கு விஸ்வரூப பூஜை செய்யப்பட்டு, நடை சாத்தப்படும்.

நாளை ​அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் கோயிலின் நடை திறக்கப்படும். அப்போது உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும் என்றும், பின்னர் மற்ற கால பூஜைகள் நடைபெறும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்