திப்பு சுல்தான் விழா ரத்து

திப்பு சுல்தான் விழா ரத்து

பெங்களூரு:

கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்படும் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவை முதல்வர் எடியூரப்பா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான அரசு கவிழ்ந்து, எடியூரப்பா தலைமையிலான பாஜ., ஆட்சி நடைபெற்றுவருகிறது. பேரவையில் எடியூரப்பா மீதான பெரும்பான்மை நிறைவேறிய ஒரே நாளில், ஆண்டுதோறும் நவம்பர் 10ம் தேதி அனுசரிக்கப்பட்டு வந்த திப்பு சுல்தான் ஜெயந்தியை முதல்வர் எடியூரப்பா ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு கடும் எதிர்ப்புக்கு இடையே திப்பு ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், வன்முறையில் விஷ்வ இந்து பரிஷத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்