3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம்

3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: சென்னை வானிலை மையம்

சென்னை:

கடந்த சில தினங்களாக, தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சில இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும், அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்