சென்னை:
ராஜீவ் காந்தியை போல் பிரதமர் மோடியை கொலை செய்ய வேண்டும் என இருவர் பேசி கொண்டிருந்ததாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மர்ம நபர் தகவல் கொடுத்துள்ளார்.
இந்த தகவலையடுத்து, அந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், திருவான்மியூர் பகுதியை சேர்ந்த திருநாகவுக்கரசு என்பது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக திருநாவுக்கரசரிடம் திருவான்மியூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.