புதுடெல்லி:
ஏர் இந்தியா விமானத்தின் கதவை வேகமாக இழுத்த பயணியால் விமானத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை டெல்லி விமான நிலையத்தில் மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 747 விமானத்தின் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் விமானம் புறப்பட தாமதமானது.
இதனையடுத்து, பயணிகள் ஆத்திரமடைந்த விமான பைலட்டுகளை அழைத்து சரமாரியாக வசைபாடினர். ஆனால், பைலட்டுகள் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனையடுத்து, பெண் பயணி ஒருவர் விமானக் கதவை வேகமாக திறக்க ஆரம்பித்தார். மேலும் கேபினையும், கதவையும் உடைக்க முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், விமானத்தில் தவறாக நடந்துகொண்ட விமான பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
#WATCH A passenger onboard Air India flight AI 865 tried to open the flight exit door forcefully, after flight was delayed due to technical reasons. (02.01.2020) pic.twitter.com/9ZFqoedzzS
— ANI (@ANI) January 4, 2020