‘‘அதிமுகவில் தான் தொடர்வேன்’’ தோப்பு வெங்கடாசலம் பேட்டி!

‘‘அதிமுகவில் தான் தொடர்வேன்’’ தோப்பு வெங்கடாசலம் பேட்டி!

சென்னை:

பெருந்துறை அதிமுக எம்எல்ஏ., தோப்பு வெங்கடாசலம், கட்சிப்பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அதில், தன்னுடைய சூழ்நிலை காரணமாக கட்சிப்பதவியிலிருந்து விலகுகிறேன் எனவும், அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அதிமுக உட்கட்சி பூசலில் பல எம்எல்ஏக்கள் வேறுகட்சிக்கு தாவிய நிலையில், இவர் ராஜினாமா செய்திருப்பது அதிர்ச்சியை அளித்தது. மேலும், தோப்பு வெங்கடாசலம் வேறு கட்சி மாறவுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், பெருந்துறையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், சொந்த காரணங்களால் கட்சி பதவியில் இருந்து விலகுவதாக கூறி தான் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்தேன். அதிமுகவிலேயே தான் தொடர்வதாகவும், அதிமுகவிலிருந்து வேறு கட்சிக்கு மாறுவதாக வெளியான செய்தி தவறானது. அதிமுகவுக்கு விஸ்வாசமாக இருப்பதுபோல் மக்களுக்கும் விஸ்வாசமாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்