சென்னை:
அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் ராஜினாமா செய்துள்ளார்.
அதிமுக உட்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சியின் சில எம்எல்ஏக்கள் டிடிவி தினகரன் அணிக்கும், திமுகவுக்கும் தாவியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது பெருந்துறை எம்எல்ஏ., தோப்பு வெங்கடாசலம், கட்சிப்பொறுப்பிலிருந்து தான் விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், தன்னுடைய சூழ்நிலை காரணமாக கட்சிப்பதவியிலிருந்து விலகுகிறேன் எனவும், அதிமுகவிலிருந்து விலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தோப்பு வெங்கடாசலம் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில், கட்சி பொறுப்பிலிருந்துதான் விலகுகிறேன். ஆனால், அதிமுக அடிப்படை உறுப்பினராக நான் பணியாற்றுவேன் என தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.
இந்த ராஜினாமா கடிதத்தால் அதிமுகவில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.