திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் ரத்து!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் ரத்து எனவும், இறுதியாண்டு மாணவர்களுக்கு இதற்க்கு முன் நடந்த பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா அச்சத்தால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து ஆண்டு மாணவர்களுக்கு பருவத்தேர்வுகள் ரத்து என அறிவிக்கப்பட்டது.

இதில், இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த தேர்வுகழும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்க்கு முன் நடந்த பருவ தேர்வு முடிவுகளின் அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்படும் என அறிவித்தனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்