தஞ்சாவூர்:
திருவள்ளுவர் சிலை அவமதிப்பு தொடர்பாக தனிப்படை அமைத்து விசாரிக்க அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை மர்மநபர்களால் அவமதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டி.ஜி.பி. திரிபாதி உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளிடையே கடும் கண்டனத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.