‘‘ஆபாச வலைதளங்களை தடை செய்யணும்’’ -திருமாவளவன்

‘‘ஆபாச வலைதளங்களை தடை செய்யணும்’’ -திருமாவளவன்

சென்னை:

ஆபாச வலைதளங்களை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் முகநூலில் அவதூறாக பதிவிட்டதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பிரேம்குமார் பட்டியலினத்தை «ச்ந்தவர் என்பதால், விடுதலை சிறுத்தை கட்சியை வலிய இணைத்து ராமதாஸ் அவதூறு பரப்பி வருவதாக விமர்சனம் செய்துள்ளார்.

தனிநபர்களின் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எப்படி பொறுப்பாக முடியும் எனவும் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆபாச வலைதளங்களை தடை செய்யவேண்டும் எனவும், அதனை கட்டுப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்