விரைவில் மாபெரும் போராட்டம்

விரைவில் மாபெரும் போராட்டம்

சென்னை:

வேதாராண்யத்தில் அம்பேத்கர் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. இது வாடிக்கையாகவே தமிழ்நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆகவே இத்தகைய அநாகரீக செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விரைவில் மாபெரும் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்