ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தனியார் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. பங்கேற்று 125 பேருக்கு பல்வேறு பல்கலை கழகங்களில் பயின்று படிப்பை முடித்த 125 பேருக்கு சான்றிதழ் வழங்கினார்.
பின்னர் அவர் விழாவில் பேசியதாவது: ஓட்டுனர்கள் ஓவியர்கள் நடத்துனர்கள் உள்ளிட்ட அனைத்து பணிக்கும் பயிற்சி பள்ளி உள்ளது.
ஆனால் நல்ல தலைவர்கள் தானாக வருகின்றனர். தேசத்தை வழிநடத்தகூடிய தலைவர்கள் உருவாக்க எந்த நிறுவனமும் இல்லை.
ஆகையால் நல்ல தலைவர்களை உருவாக்க ஆசிரிய பெருமக்கள் தான் தலைவராக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.