தாய் சிறுத்தையின் 58 வது பிறந்தநாளை, கொண்டாடிய ஒசூர் சிறுத்தைகள்

தாய் சிறுத்தையின் 58 வது பிறந்தநாளை, கொண்டாடிய ஒசூர் சிறுத்தைகள்

ஒசூரில் திருமாவளவனின் 58வது பிறந்தநாளை முன்னிட்டு விசிகவினர் சார்பில் பொதுமக்களுக்கு உணவு வழங்கி கேக்வெட்டி கொண்டாடினர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனின் 58 வது பிறந்தநாளை முன்னிட்டு விசிகவினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் ஓசூர் மாநகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மூக்கண்டப்பள்ளி என்னுமிடத்தில் திருமாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

நகர செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் நடைப்பெற்ற பிறந்தநாள் விழாவில் ஒசூர் முன்னாள் திமுக நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், திக மாவட்ட தலைவர் வனவேந்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று இயக்க கொடியை ஏற்றி வைத்தனர்.

20 கிலோ எடைக்கொண்ட கேக் வெட்டிய விசிகவினர் சார்பில் பொதுமக்களுக்கு மதிய உணவும், ஏழை எளிய பெண்கள் 20பேருக்கு இலவசமாக புடவைகள் வழங்கப்பட்டன.

எழுச்சி தமிழரின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் நகர பொருளார் ஸ்ரீராம், துணை செயலாளர்கள் சேகர், செண்ணப்பா, மகளிர் விடுதலை இயக்கம் புவனேஸ்வரி ஆகிய விசிக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்