ஜம்மு-காஷ்மீர்:
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்., இந்தியாவின் ஒரு பகுதியை தங்களுடையது என முதன் முறையாக அறிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர், சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ஐ.எஸ்., அமைப்பை சேர்ந்த என கருதப்பட்ட பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.
இதனையடுத்து, ஐ.எஸ்., அமைப்பின் இணையதளத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அந்த செய்தியில், ‘விலாஹ் ஆப் ஹிந்த்’ என்ற பகுதியை தங்களது புதிய மாகாணமாக ஐ.எஸ்., அமைப்பு அறிவித்திருந்தது.
ஜம்மு-காஷ்மீர், சோபியான் பகுதியில் நடந்த துப்பாக்கிசூட்டில் இஷ்பக் அகமது சோபி என்பவர் கொல்லப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.