பல்வேறு திட்டபணிகள் துவக்கம்

பல்வேறு திட்டபணிகள் துவக்கம்

ஒசூர்:

தளி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி தளி தெற்கு ஒன்றியம் ஜவளகிரி கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய், அகலகோட்டை ஊராட்சி மரகரதொட்டி கிராமத்தில் ரூ.2.80 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்கூடம், சாரண்டப்பள்ளி ஊராட்சி நேரிலட்டி கிராமத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, சாரண்டப்பள்ளி கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பில் 2 பாலங்களுக்கான பணிகளை தளி எம்.எல்.ஏ., ஒய்.பிரகாஷ் துவக்கிவைத்தார்.

மேலும், மாயநாயகனப்பள்ளி கிராமத்தில் ரூ.1 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் சுமார் ரூ.8.30 லட்சம் மதிப்பில் சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைப்பதற்கான பணிகளை தளி எம்எல்ஏ., ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்தார்.

உடன் தளி தொகுதியின் திமுகவை சேர்ந்த தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், மாவட்ட தொ.மு.ச கோபாலகிருஷ்ணன், சீனப்பா, சிவா, மூர்த்தி, ஈரப்பா, சூடேஷ், கெஞ்ப்பா, நாராயணசாமி, முருகேஷ், மாதேவ், கெஞ்சப்பா, முனவர், மஞ்சு, நட்ராஜ், மரகரதொட்டி, சாரண்டப்பள்ளி, ஜவளகிரி மற்றும் சாரண்டப்பள்ளியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்