பாங்காக்:
அரசு முறை பயணமாக தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடிக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசியான் இந்தியா உச்சிமாநாடு, 14வது ஆசிய உச்சி மாநாடு மற்றும் இந்தியா, சீனா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு உச்சி மாநாடும் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்க 3 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி டெல்லியிலிருந்து இன்று தாய்லாந்து புறப்பட்டுச்சென்றார். அந்நாட்டின் தலைநகர் பாங்காக் விமான நிலையத்துக்கு இன்று சென்றடைந்த பிரதமர் மோ9டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.