சென்னை:
ரஜினிகாந்த் நடிப்போது நிறுத்திக்கொள்வது நல்லது என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ரஜினி குறித்து கம்யூ., தலைவர் தா.பாண்டியன் அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் நடிப்போது நிறுத்திக்கொள்வது நல்லது. நாட்டில் எத்தனை மாநிலம் இருக்கிறது என்றே ரஜினிக்கு தெரியாது. பட்ஜெட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் ரஜினிக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இஸ்லாமியர்களுக்காக முதல் குரல் கொடுக்க ரஜினி யார்? முதல் குரலும் வேண்டாம், கடைசி குரலும் வேண்டாம் என தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.