துப்பாக்கிச்சூடு; 2 பெண்கள் பலி

  • In General
  • February 4, 2020
  • 163 Views
துப்பாக்கிச்சூடு; 2 பெண்கள் பலி

ஹவுஸ்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் இருவர் பலியாகியுள்ளனர்.

அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக்சாஸ் ஏ அண்டு எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மதியம் ரெசிடென்சி ஹால் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் பலியாகியுள்ளதாகவும், 2 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல்கலைக்கழத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக புதன் வரை ரத்து செய்யப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்