ஹவுஸ்டன்:
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் நடத்த துப்பாக்கிச்சூட்டில் பெண்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக்சாஸ் ஏ அண்டு எம் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று மதியம் ரெசிடென்சி ஹால் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் பலியாகியுள்ளதாகவும், 2 வயது சிறுமி ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாணவர்களும் பேராசிரியர்களும் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல்கலைக்கழத்தின் அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக புதன் வரை ரத்து செய்யப்பட்டன.