பிணையக் கைதியாக ஒருவர்; தீவிரவாதிகளுடன் சண்டை

பிணையக் கைதியாக ஒருவர்; தீவிரவாதிகளுடன் சண்டை

ஜம்முகாஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல் நடத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் படோடே என்ற பகுதியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதியில் இன்று அதிகாலை தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசினர். அங்கு விரைந்த ராணுவம் அவர்கள் மீது தொடர்ந்து துப்பாகிச்சூடு நடத்திவருகிறது.

இந்த தாக்குதலின்போது, பொதுமக்களில் ஒருவரை பிணையக் கைதியாக தீவிரவாதிகள் வைத்துள்ளனர்.

மேலும், காந்தேர்பால் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் பாதுகாப்புப் படை சுட்டுக்கொன்றது. சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்