பிரதமர் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தனிப்படை அமைப்பு

பிரதமர் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தனிப்படை அமைப்பு

டெல்லி:
உரி பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பு தாக்குதலில் ஈடுபட்டது.

இதனையடுத்து பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அவர்களை அழித்தது.

இதனை தொடர்ந்து தங்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலால் மிகவும் கோபமாக இருந்தது பயங்கரவாத அமைப்புகள்.

மேலும், மத்திய அரசு மீது ஜெய்ஷ் இ முகமது இயக்கம் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இருந்தது.

இந்த நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவலுக்கு அச்சுறுத்தல் எழுந்தது.

இதனிடையே, பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தினை சேர்ந்தவர்களின் கையால் எழுதப்பட்ட குறிப்புகள் கொண்ட தகவலை வெளிநாட்டு உளவு அமைப்பு ஒன்று இடைமறித்து தெரிந்து கொண்டது.

இதில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியதற்கு பதிலடியாக பிரதமர் மோடி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் மீது தாக்குதல் நடத்துவது என திட்டமிட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த மாதம் செப்டம்பரில் மிக பெரிய தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் பற்றி அவர்கள் பேசி கொண்டதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்