சென்னை:
எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதையடுத்து, முப்பருவ பாடதிட்டம் ரத்து செய்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிமுகப்படுத்தப்படவுள்ளதால், முதற்கட்டமாக 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பருவ பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டு ஒரே பாடத்திட்டமாக செயல்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.