மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.10க்கு மதிய சாப்பாடு வழங்கும் திட்டத்தை மாநில அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.10க்கு மதிய உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என கடந்த சட்டசபை தேர்தலின்போது சிவசேனா கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
இதனையடுத்து, மகாராஷ்டிராவில் தற்போது கூட்டணி ஆட்சியமைத்துள்ள சிவசேனா தலைமையிலா அரசு, தற்போது ரூ.10க்கு ‘சிவ போஜன்’ எனப்படும் மதிய உணவு திட்டத்தை நேற்று அமல்படுத்தியுள்ளது.