கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்க தடை

  • In Chennai
  • November 22, 2019
  • 195 Views
கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்க தடை

சென்னை:

தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளாக வசிப்போருக்கு பட்டா வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளாக வசிப்போருக்கு பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி, சேலம் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம், பட்டா வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்த் சென்னை உயர்நீதிமன்றம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்