பெண் மருத்துவர் கொலை: 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை

பெண் மருத்துவர் கொலை: 4 குற்றவாளிகள் சுட்டுக்கொலை

தெலங்கானா:

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலையில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது, போலீசாரின் துப்பாக்கியை பறிக்க முன்றதாக கூறப்படுகிறது. மேலும், தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் என பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்