தெலங்கானா:
தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
தெலங்கானாவில் பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொடூர கொலையில் தொடர்புடைய 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில், குற்றவாளிகள் 4 பேரையும் குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது, போலீசாரின் துப்பாக்கியை பறிக்க முன்றதாக கூறப்படுகிறது. மேலும், தப்பிசெல்ல முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றதால் எனது மகளின் ஆத்மா சாந்தியடையும் என பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்துள்ளார்.
Hyderabad: Locals had showered rose petals on Police personnel at the spot where accused in the rape and murder of the woman veterinarian were killed in an encounter earlier today pic.twitter.com/66pOxK1C2b
— ANI (@ANI) December 6, 2019