சென்னை:
தமிழக அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 19,427 ஆசிரியர், ஆசிரியர் அல்லாத தற்காலிக பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்காலிக அடிப்படையில் இருந்த முழு நேர அடிப்படையிலான பணியிடங்கள், தற்போது நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.