சென்னை:
தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுகிறது.
சான்றிதழ் சரிபார்ப்பு 11 மாவட்டங்களில் நடைபெறுகின்றன. அழைக்கப்பட்டவர்கள் காலை 10 மணிக்கு உரிய சான்றிதழ்களுடன் நேரில் வர வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.