பள்ளியிலேயே பாலியல் உறவு

பள்ளியிலேயே பாலியல் உறவு

நாமக்கல்:

நாமக்கல் அருகே பள்ளியிலேயே சத்துணவு அமைப்பாளருடன் பாலியல் உறவு வைத்த ஆசிரியரை பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.

நாமக்கல் மாவட்டத்தின் புதன் சந்தையை அடுத்த எஸ்.உடுப்பத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் சத்துணவு மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 4 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றுபவர் சரவணன். இவர் அதே பகுதியை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர் ஜெயந்திக்கும் தகாத உறவு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் பள்ளியின் கழிப்வறையில் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும், இதனை கண்ட பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். பெற்றோர்களின் புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் அவர்களுக்கு எச்சரிக்க விடுத்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் பள்ளியின் ஆசிரியர் சரவணனும் சத்துணவு அமைப்பாளர் ஜெயந்தியும் பள்ளி வளாகத்திலேயே தகாத உறவில் ஈடுபட முன்றதாக தெரிகிறது. இதனை அறிந்த ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியிலிருந்த ஆசிரியர் சரவணன் வகுப்பறைக்கு சென்று அவருக்கு தர்ம அடி கொடுத்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்த கல்வி அதிகாரிகள் மற்றும் புதுச்சத்திரம் காவல் துறையினர், சரவணனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்