ஆள் உயரத்திற்கு விளைந்த மரவள்ளி கிழங்கு

ஆள் உயரத்திற்கு விளைந்த மரவள்ளி கிழங்கு

சத்தியமங்கலம் அருகே 5 அடி உயரத்துக்கு மரவள்ளி கிழங்கு விளைந்துள்ளதால் விவசாயி மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி முருகேசன் இவர் தனக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளார். தனது விளை நிலத்தில் அறுவடை பணியில் ஈடுபட்ட போது 5அடி உயர மரவள்ளிக்கிழங்கு கிடைத்துள்ளது.

வழக்கமாக இரண்டடி நீளம் வரை மட்டுமே உள்ள நிலையில் ஒரே செடியில் 5அடி உயரத்துடன் கொத்துக்கொத்தாக மரவள்ளி கிழங்கு விளைந்துள்ளதால் விவசாயி முருகேசன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். தற்போது மரவள்ளி கிழங்கு நல்ல விலைக்க விற்பனையாவதாக தெரிவிக்கும் அவர் முறையான பராமரிப்பு செய்ததால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்