தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி

தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி

சென்னை:
தமிழகத்திற்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பிரதமர் மோடி தமிழில் ட்விட் செய்துள்ளார்.

சீன அதிபர் ஜின்பிங் உடன் பிரதரம் மோடி இன்று சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு பிரதமர் வந்துள்ளார்.

இது பற்றி ட்விட்டர் பக்கத்தில், சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

சீன அதிபர் ஸி ஜின்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்