தமிழகம் இரண்டாக பிரியலாம்.. சீமான் தகவல்

தமிழகம் இரண்டாக பிரியலாம்.. சீமான் தகவல்

மதுரை:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பிரித்ததை போன்று தமிழகத்தையும் இரண்டாக பிரிப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காஷ்மீர் விவகாரம் பற்றி மதுரையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

காஷ்மீர் போல் தமிழகத்தையும் பிரதமர் மோடி அரசு இரண்டாக பிரித்தாலும் பிரிப்பார்கள்.

வடதமிழகம், தென்தமிழகம் என இரண்டாக பிரித்து விடுவார்கள். புதுவை மாநிலத்தை போன்று சென்னையை யூனியன் பிரதேசமாக மாற்றுவார்கள். நிர்வாக வசதிக்காக மாவட்டங்களை பிரிக்கலாம்.

ஆனால் மாநிலங்களை பொறுத்தவரையில் பிரிக்கக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்