சென்னை:
தமிழகத்தில் இதுவரை பெய்த மழையின் அளவு 18 செ.மீ. என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் இதுவரை 18 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும், இதனைத்தொடர்ந்து மேலடுக்கு சுழ்ற்சி காரணமாக தமிழகத்தின் வட தமிழகத்தின் திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர், நாகை உள்ளிட்ட இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னையை பொறுத்தவரை இதுவரை சராசரியாக 33 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.