இலவச ஆடு திட்டம்; பயனாளிகளுக்கு பயிற்சி

இலவச ஆடு திட்டம்; பயனாளிகளுக்கு பயிற்சி

இண்டூர்:
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இண்டூர் கால்நடை மருந்தகத்தில் தமிழக அரசு சார்பில் விலையில்லா வெள்ளாடு, செம்மறி ஆடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச பயிற்சி இன்று (5.11.2019) வழங்கப்பட்டது.

இந்த பயிற்சி முகாமில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மண்டல இணை இயக்குனர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் வேடியப்பன், மற்றும் கால்நடை மருத்துவர்கள் தசரதன், அருண் ஆனந்த் (பண்டஅள்ளி மருத்துவமனை) ஆகியோர் பங்கேற்று, ஆடு வளர்ப்பு மற்றும் அதில் கிடைக்கும் வருமானம் பற்றி பயனாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்