சென்னை:
தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இரக்கம், கருணை, பெருந்தன்மை, சகிப்புத்தன்மை போன்ற குணங்களை கடைபிடிக்க உறுதியேற்போம்’’ என இஸ்லாமிய பெருமக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.