தமிழகத்தில் 31 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் 31 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக பாதிப்பு எண்ணிக்கை தினமும் ஆயிரத்துக்கும் மேல் பதிவாகி வருகிறது. தொடர்ந்து எட்டாவது நாளாக இந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியின் படி நேற்று மட்டும் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் மொத்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 31,667 ஆக அதிகரித்துள்ளது. நேற்று18 பேர் உயிரிழந்துள்ளனர். 604 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையை பொறுத்த அளவில் சென்னையில் 1,155 பேர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 22,149 ஆக அதிகரித்துள்ளது.14,396 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். 16,999 பேர் ஒட்டுமொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 76 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 14,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் 5,92,970 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு விகிதம் 0.84% ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்