புதுடெல்லி:
தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறவிப்பில், தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்.
வேட்பு மனு தாக்கல் செப்டம்பர் 30ம் தேதி தொடங்கும் எனவும், வேட்பு மனுக்களை திரும்ப பெற அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் எனவும், அக்டோபர் 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.