சென்னை:
சிங்கார சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன் என ஸ்டாலின் கூறியது என்னாது என தமிழக பாஜ., தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் தெரிவிக்கையில், சிங்கார சென்னனையை சிங்கப்பூர் ஆக்குவேன் என சென்னை மேயராக இருந்தபோது சொன்ன மு.க.ஸ்டாலின் தற்போது தான் மட்டும் சிங்கப்பூர் சென்றுவந்து இங்கே தண்ணீர் எங்கே என போராடுகிறார்.
சிங்கப்பூர் சென்றதற்கு பதிலாக பெங்களூரு சென்று தண்ணீர் திறந்துவிடுங்கள். மேகதாதுவில் அணை கட்ட வேண்டாம் என்று சொல்லிவிட்டு இங்கே வந்து போராடி இருந்தால் அவரை பாராட்டி இருக்கலாம் என தமிழிசை தெரிவித்துள்ளார்.