சென்னை:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ., சார்பில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை பின்னடைவை சந்தித்தார்.
இந்நிலையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ஏன் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்று வருங்காலத்தில் மக்கள் உணர்வார்கள். மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன். பா.ஜ.,வுக்கு வாக்களித்த மக்களுக்கு எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன் என்றார்.
மேலும், தமிழக மக்களிடம் வாக்குகளை ஏன் பெறவில்லை என செய்தியாளர்கள் கேட்டதற்கு, நாங்கள் ஆத்ம பரிசோதனை செய்யவேண்டம் என தமிழிசை தெரிவித்தார்.