சென்னை:
மக்களவை தேர்தலில் பா.ஜ., கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி வெற்றிபெற்றுள்ள நிலையில், இந்த தோல்வி தற்காலிகமானதுதான் என பா.ஜ., தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களுக்கு பதிலளித்து பேசுகையில், தமிழகத்தில் பாஜகவுக்கு ஏற்பட்ட தோல்வி தற்காலிகமானது தான், நிச்சயம் ஒருநாள் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.
மேலும், ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கொடுப்பது குறித்த கேள்விக்கு பிரதமர் மோடி தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.