15 நாளில் தெலுங்கு பேசுவேன்

15 நாளில் தெலுங்கு பேசுவேன்

ஐதராபாத்:
15 நாட்களில் தெலுங்கு கற்றுக் கொண்டு தெலுங்கு பேசுவேன் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்திரராஜன் இருந்தார். அவரது பதவிக்காலம் டிசம்பரில் முடிவடைகிறது.

இந்நிலையில், தெலங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலங்கானா ஆளுநர் மாளிகையில் அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழிசைக்கு பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

ஐதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் அதிகாரிகளுடன் சந்தித்து பேசினார்.

அப்போது தான் அனைவரிடமும் நட்பாக பழகும் எண்ணம் கொண்டிருப்பதாகவும் அதே நேரத்தில் அதிகாரிகள் தங்களின் கடமைகளை சரிவர செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அப்போது அவர் ஊழியர்களிடம் பேசும்போது இன்னும் 15 நாட்களில் தெலுங்கு கற்றுக்கொண்டு பொதுமக்களிடம் பேசுவேன் என்று தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்