ஜீவிதாவுக்கு ரூ.50 ஆயிரத்தை நேரில் வழங்கிய தமிழிசை..!

ஜீவிதாவுக்கு ரூ.50 ஆயிரத்தை நேரில் வழங்கிய தமிழிசை..!

சென்னை:

நீட் தேர்வில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவி ஜீவிதாவுக்கு முதற்கட்ட நிதியாக ரூ.50 ஆயிரத்தை, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து வழங்கினார்.

தையல் கலைஞரின் மகளான மாணவி ஜீவிதா நீட்டில் வெற்றிபெற்றதை அடுத்து, அவரது மருத்துவ படிப்பிற்கு உதவுவதாக தமிழிசை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜீவிதாவை நேரில் சந்தித்து தமிழிசை வாழ்த்து தெரிவித்து இந்த ரூ.50,000 நிதியை வழங்கினார். தான் மருத்துவராக பணியாற்றி கிடைத்த பணத்தின் சேமிப்பில் இருந்து தான் ஜீவிதாவுக்கு நிதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்