ஏ.சி.சண்முகம் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு

ஏ.சி.சண்முகம் கருத்துக்கு தமிழிசை எதிர்ப்பு

சென்னை:
வேலூர் தேர்தலில் தோல்வி பற்றி ஏ.சி.சண்முகம் கூறிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- முத்தலாக், காஷ்மீர் தனி அந்தஸ்து ரத்து போன்ற சட்டங்களால்தான் வேலூர் தொகுதியில் தோற்றேன் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். இது மிகவும் தவறானது.

இது போன்ற அறிவிப்புகள் தான் அவருக்கு அதிக வாக்குகளை பெற்றுத் தந்துள்ளது.
முஸ்லிம் மக்கள் யாரும் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. அரசியல் கட்சிகள் மட்டும்தான் எதிர்க்கிறார்கள்.

இஸ்லாமிய மக்கள் ஆதரித்து இருக்கிறார்கள். அதனால்தான் ஏ.சி.சண்முகம் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்