சென்னை:
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செல்போனை மர்ம நபர் திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசையும் கலந்துகொண்டார். அப்போது மர்ம நபர்கள் தமிழிசையிடம் இருந்த செல்போனை திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.