‘‘அதிமுக முடிவுக்கு வந்தாதான் ரஜினி அரசியலுக்கு வருவார்’’ தமிழரருவி மணியன் பேட்டி..!!

‘‘அதிமுக முடிவுக்கு வந்தாதான் ரஜினி அரசியலுக்கு வருவார்’’ தமிழரருவி மணியன் பேட்டி..!!

தூத்துக்குடி:

கடந்த 2017ம் ஆண்டு ரசிகர்கள் உடனான சந்திப்பில், நான் அரசியலுக்க வருவது உறுதி, 234 தொகுதியிலும் போட்டியிடுவேமாம், போருக்கு தயராகுங்கள் என தெரிவித்திருந்தார்.

ஆனால், இதுவரையில் அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தெரியவில்லை. ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். ரஜினியின் மூத்த சகோதரர் மட்டும் ரஜினி அரசியல் பயணம் குறித்து அவ்வப்போது பேசி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சியில் சத்யநாராயணா கூறுகையில், தேர்தல் முடிவுக்கு பின் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து தெரியவரும் என தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, அப்துல்கலாமின் அரசியல் ஆலோசகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழருவி மணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக ஆட்சி என்று முடிவு வருகிறதோ அன்று தான் ரஜினி அரசியலுக்கு வருவார். திமுக – அதிமுக கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டுமென்றால் ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்