தமிழக மின்சார வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களை தேர்வு செய்தது மிகப்பெரிய கண்டனத்துக்குரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின்வாரிய உதவிப்பொறியாளர்கள் தேர்வில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களை தேர்வு செய்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
மேலும், அரசுப்பணிகள் மற்றும் மத்திய அரசு நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீதம் பணி கிடைக்க சட்டத்தை இயற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.